கேரளமாநிலம் பாலக்காடு ஆலத்தூரிலுள்ள தனியார் பல் மருத்துவமனையில் தனது ஒழுங்கற்ற பல் வரிசையை ஒழுங்கு படுத்தும் சிகிர்ச்சைக்காக சென்ற காயத்ரி என்ற இருபத்து ஒன்று வயது பெண்ணின் நாக்கில் டிரில்லிங் எந்திரம் மூலம் மருத்துவர் தவறுதலாக துளையிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காயத்ரி புகாரளித்துள்ளார். தனது பல் வரிசையின் முன் பகுதியில் பிரேஸ் ஒன்றினை பொருத்தும் போதே மருத்துவர் கவனக்குறைவால் தன் நாக்கில் துளையிட்டுவிட்டதாக கூறும் காயத்ரியின் புகாரின் பேரில் பாலக்காடு ஆலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பல் சிகிர்ச்சையின் போது நாக்கில் துளையிட்ட கேரள மருத்துவர்..
schedulePublished Mar 30th 25