எஸ்.ஏ. கல்லூரியில் காட்சித் தொடர்பியல் மாணவர்களுக்குப் பிரிவு உபச்சார விழா

thumb_upLike
commentComments
shareShare

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை, முது அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் பிரிவு உபச்சார விழாவைக் கல்லூரித் திரையரங்கில் ஏப்ரல் 25, 2025 அன்று ஏற்பாடு செய்திருந்தது. பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வு, உணர்ச்சி, மகிழ்ச்சியோடு கூடிய சமூக உணர்வுடன் நிறைந்திருந்தது.

பாரம்பரிய விளக்கு ஏற்றதலுடன் தொடங்கிய விழாவிற்குத் துறைத் தலைவர் முனைவர் ஆர். சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இளைய மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து, அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒரு காணொளிக் காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது. நன்றியுரை, புகைப்பட அமர்வு மற்றும் சிற்றுண்டியுடன் விழா, நெகிழ்ச்சியுடன் இனிதே நிறைவு பெற்றது

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close