Connect with us

Sports

“Virat Kohli and Anushka Sharma Set to Grace FA Cup Final: Power Couple to Attend Prestigious Event”

Anushka Sharma and Virat Kohli, the much-adored couple of Bollywood, have a knack for stealing hearts with their impeccable style and sizzling chemistry. With a global reach

Published

on

Anushka Sharma and Virat Kohli, the much-adored couple of Bollywood, have a knack for stealing hearts with their impeccable style and sizzling chemistry. With a global reach, this power couple from India has gained immense popularity and influence. Recently, the couple was spotted at the Mumbai airport, en route to London, and their pictures with fans in the city have been circulating on social media, attracting significant interest. It has recently come to light that they have been extended an invitation to make an appearance at the highly anticipated FA Cup Final, further solidifying their impressive track record of notable public appearances.

Anushka Sharma and Virat Kohli, popularly known as Virushka among their global fan base, have been extended an invitation by a prominent athleisure brand and the esteemed Manchester City Football Club to grace the FA Cup Final in 2023. On Saturday, June 3, the much-awaited clash between Manchester City and Manchester United is set to take place at the prestigious Wembley Stadium. For several decades, the rivalry between these two world-renowned football teams has been nothing short of intense, making their upcoming clash a highly anticipated event within the football community.

Anushka Sharma made her debut appearance at the Cannes Film Festival, leaving her fans mesmerised and receiving praise from all corners. As per usual, Virat Kohli did not hesitate to express his admiration for his spouse’s photographs. At present, the couple is relishing their time in London, where Virat is gearing up for the imminent World Test Championship final. Anushka is all set to make a comeback on the big screen with the upcoming film ‘Chakda Xpress,’ marking her return after a break of nearly four years.

The FA Cup Final is set to be an exciting event, with the presence of popular celebrities Anushka Sharma and Virat Kohli. Fans are eagerly anticipating the couple’s attendance, as they are known for their charm and unwavering support for the game.

Sports

ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடியா? அசர வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்துவரும் விராட் கோலியின் சொத்து மதிப்பு

Published

on

By

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்துவரும் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய சமூகவலைத் தளப்பதிவின் மூலம் அவருக்கு கிடைத்து வரும் வருமானம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான StockGro விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உலகின் அதிக வருவமானம் ஈட்டும் நபர்களில் ஒருவராக இருக்கிறார் எனக் கூறியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது நட்சத்திர வீரர்களுள் ஒருவராக இருக்கிறார். ஃபார்மை விட்டு சறுக்கிக் கொண்டே இருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் விராட் கோலியின் முதலீடு, விளம்பரங்கள், சமூகவலைத் தளப்பக்கங்களின் வருமானம் என்று அவருடைய சொத்து மதிப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் விராட் கோலியின் மொத்த மதிப்பு ரூ.1,050 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் கோலி 7 கோடிக்கு பிசிசிஐ யுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதைத்தவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும் ஒருநாள் போட்டிக்கு தலா 6 லட்சமும், ஒரு டி20 போட்டிக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் அவர் ஆண்டுக்கு 15 கோடி சம்பளம் வாங்குகிறார்.

கோலி பல பிராண்டுகள் மற்றும் உணவகங்களில் முதலீடுகளை வைத்துள்ளார். அந்த வகையில் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல், ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல், ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்ற நிறுவன முதலீடுகளின் மூலம் வருமானம் ஈட்டிவருகிறார்.

சொந்த முதலீடுகளைத் தவிர இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்ஆர்எஃப், மிந்த்ரா, வீவோ, அமெரிக்கன் டரிஸ்டர், நாய்ஸ், சிந்தால், வாலினி உள்ளிட்ட 18 பிராண்ட் பொருட்களுக்கு விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறார். இந்த பிராண்டுகளுக்காக ஒரு விளம்பரத்தில் நடிக்க ஆண்டுக்கு 7.50 கோடி-10 கோடி வரை சம்பளம் பெற்று ஒட்டுமொத்தமாக பிராண்டு பொருட்கள் மூலம் சுமார் 175 கோடி வரை சம்பாதிக்கிறார்.

இந்தியன் சூப்பர் லீக் கிளப் எஃப்சி கோவா, டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த அணி போன்ற அணிகளுக்கு இணை உரிமையாளர் என்ற முறையில் முதலீடுகளைச் செய்து அதிலும் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுவதாகவும் அதேபோல ஒரு டிவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விலையுயர்ந்த வாட்ச், வாகனங்களைத் தவிர்த்து மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடு, குருகிரால் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்துள்ளார். இதைத்தவிர 31 கோடிக்கு விலையுயர்ந்த கார்களையும் வாங்கி குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோஜர் ஃபெடரர், செர்ஜியோ ரேமோஸ், வெய்ன் ரூனி போன்ற பிரபலங்களுக்கு மத்தியில் உலக அளவில் முன்னணி பிரபலமாக இருந்துவரும் விராட் கோலி இன்ஸ்டாவிலும் டிவிட்டரிலும் சம்பாதிக்கும் வருமானம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.
 

Continue Reading

Home

கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணமா? ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

Published

on

By

இந்தியக் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனக்கு இந்தியக் கிரிக்கெட் அணியில் கேப்டன் பதவி கிடைக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவருடைய கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் மூத்த வீரராக இருந்துவரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஐசிசி போட்டிகளில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பிளேயிங் 11இல் அஸ்வின் இடம்பெறவில்லை. இதுகுறித்து மூத்த வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி ஏன் தனக்கு வழங்கப்பட வில்லை என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது 2022 இல் முன்னாள் கேப்டன் விராட் கோலி பதவி விலகியதைத் தொடர்ந்து புது கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஐந்தாவதாக ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரும் சிலரால் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் மற்றவர்களை முந்திக்கொண்டு ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் மூத்த வீரராக இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பல இடங்களில் உதவிய அஸ்வினின் பெயர் எங்கேயும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதற்குக் காரணம் நான் அதிகமாகப் பேசுவதும் சிந்திப்பதும்தான் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். நான் அதிகமாகச் சிந்திப்பதாகத் தெரிவதால்தான் கேப்டன் பதவியை இழந்தேன். நிறையே பேர் என்னை அதிகமாக சிந்திப்பவன் என்றே கூறுகின்றனர். 15-20 போட்டிகளில் விளையாடும் ஒரு வீரர் அதிகமாகச் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றால் ஒரு நபர் மன உளைச்சலுக்கு ஆளாவார்.

மேலும் அது என் வேலை என்பதால் அதிகமாக யோசிக்கிறேன். இது என் பயணம் எனவே இதுவே எனக்குப் பொருத்தமானது என்றும் யாராவது என்னிடம் நீங்கள் 15 போட்டிகளில் விளையாட போகிறீர்கள், அதிகம் கவனிக்கப்படுவீர்கள், நீங்கள்தான் வீரர்களுக்குப் பொறுப்பு, கேப்டன் பதவியில் இருக்கிறீர்கள் என்றும் சொன்னால் நான் ஏன் சிந்திக்க வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சக வீரர்கள் பற்றி பேசிய அவர் முன்பு நண்பர்களாக இருந்தவர்கள் கூட தொழில்முறையில் தங்களை முன்னேற்றிக் கொண்டு தற்போது சக வீரரர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெறாதது குறித்து பேசிய அவர் நான் போட்டியில் விளையாட விரும்பினேன்.  காரணம் நான் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு பல்வேறு வகைகளில் பங்களித்திருக்கிறேன். இதற்கு முன்பு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியிலும் நன்றாகப் பந்துவீசி 4 விக்கெட்டை வீழ்த்தி இருந்தேன். ஆனால் இந்த முறை நான் அணியில் இருக்க மாட்டேன் என்றும் 48 மணி நேரத்திற்கு முன்பே தெரியும் என்றும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது குறித்து ஏற்கனவே ரசிகர்களும் பிரபலங்களும் விமர்சித்து வரும் நிலையில் கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணம் என்று அவரே விளக்கம் அளித்திருக்கும் இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பேசபொருளாகி இருக்கிறது.
 

Continue Reading

Sports

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பிய இந்தியா… 10 வருட வரலாற்றை கிளறும் நெட்டிசன்ஸ்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி படுதோல்வி அடைந்திருக்கிறது.

Published

on

By

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தப்போட்டியைத் தவிர கடந்த 10 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணி சிவப்பு நிற பந்து விளையாட்டில் 9 முறை தோல்வியைத் தழுவி இருக்கும் வரலாற்று தோல்விகளை நெட்டிசன்கள் கிளறி எடுத்து விமர்சித்து வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிலேயே தனது வெற்றியை நிலைநிறுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் முதல் இன்னிங்ஸில் ட்ராவிஸ் டெட் – ஸ்மித் ஜோடி 250 விளாசியதால் 469 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களை எடுத்ததைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தனர். இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 234 ரன்களை மட்டுமே இந்திய வீரர்கள் அடித்த நிலையில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற அணி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியக் கிரிக்கெட் அணை எந்த ஐசிசி போட்டிகளிலும் வெற்றிப்பெறவில்லை. இதனால் நெட்டிசன்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என்று பலரும் இந்தியக் கிரிக்கெட் அணியை மோசமாக விமர்சித்து வருகின்றர். அதைத் தொடர்ந்து தோல்வி வரலாற்றையும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

2014 – டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது.

2015 உலகக்கோப்பை அரையிறுதில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது.

2016 – டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

2017 – சாம்பியன்ஷிப் டிராபி போட்டியில் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.

2019 – உலகக்கோப்பையில் விளையாடிய இநதிய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது.

2012 – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

2021 – டி20 உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய குரூப் சுற்றிலேயே தோல்வியுற்றது.

2022- டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது.

2023 – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய இநதிய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்திருக்கிறது.

அதிலும் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை சென்று இந்திய அணி 2 முறை தோல்வியடைந்திருக்கிறது.

இந்நிலையில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்துப் பலரும் அலசி வரகின்றனர். அதில் ஒன்று வெள்ளை நிறக் கிரிக்கெட்டான ஐபிஎல போட்டிகளில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்களத்திற்கு தாமதாகச் சென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு குறைந்தது 1 மாதத்திற்கு முன்பே வீரர்கள் சென்றிருக்க வேண்டும், குறைந்தது ஒரு பயிற்சி போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் பிரபலங்களே கருத்துக் கூறி வருகின்றனர்.

அடுத்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை தவறாகக் கணித்து விட்டார். அதிலும் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல் விட்டது பெரிய தவறு என்று கருத்துக் கூறிவருகின்றனர். காரணம் ஆஸ்திரேலிய அணியில் 5 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியில் சூழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இருந்திருக்க வேண்டும். அஸ்வின் இடம்பெறாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று சச்சின் முதற்கொண்டு பல பிரபலங்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

அடுத்து வெள்ளை நிற பந்தில் அதிரடி காட்டிய வீரர்கள் பயிற்சி இல்லாமல் திடீரென்று டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் திணறினர் என்றும் அதிரடி காட்டாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

Trending

Discover more from NewsGlitz

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading